"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Saturday, December 24, 2011

மீள் மாற்றம் (Remix Song) -11

Myspace Sad Lonely Graphics Crying Clipart
புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
 

புதிய வரிகள்.
ஆண் குரலில்...
யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது?
யார் நொந்தது?
நெஞ்சம் தள்ளாடுது 

நினைவே நினைவே
உன்னை யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது?
யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது?
உள்ளத்தில் உந்தன் பிரதி விம்பம்
நீ தந்தது...
இதமாய் உள்ளது
நீ வாழும் வாழ்விற்கு நான் அர்த்தமாய்
உன் கோபம் அன்புக்கும் நான் சொந்தமாய்
உன் கனவிலே...
ஒளி நான் இல்லையா?

யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது?
யார் நொந்தது?
நெஞ்சம் தள்ளாடுது 

இன்னிசை போலே
உன் குரல் கேட்டு
நான் தானம்மா...
ரசித்தேன் மௌனமா
என்னோடு நீ கொண்ட நட்பின் சொந்தம்
நினைவுக்குள் எப்போதும் வந்து செல்லும்
என் மண்ணிலே...
உன்னன்பை கேட்கிறேன்

யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது
யார் நொந்தது?
நெஞ்சம் தள்ளாடுது 

நினைவே நினைவே
உன்னை யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது?
யார் நொந்தது?
நெஞ்சம் தள்ளாடுது

யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்

ஆண், பெண் குரல்களில்...
யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
யார் வந்தது?
கண்கள் தாலாட்டுது

மனமே மனமே
உன்னை யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
நெஞ்சுக்குள் உந்தன் காலடி சத்தம்
நீ வந்தது...
சுகமாய் உள்ளது
நீ சொல்லும் சொல்லுக்கு நான் அர்த்தமாய்
உன் வெள்ளிக்கொலுசுக்கு நான் சத்தமாய்
உன் கண்ணிலே...
இமை நான் அல்லவா?

யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
யார் வந்தது?
கண்கள் தாலாட்டுது

மெல்லிசை போலே
நீ வரும் போது
நான் யாரம்மா?
இருந்தேன் மௌனமா
என்னோடு நீ பேசி சென்ற பின்பும்
ஞாபகம் ஒவ்வொன்றும் என்னைக்கொல்லும்
என் சுவாசமே...
உனக்காய் வாழ்கிறேன்

யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
யார் வந்தது?
கண்கள் தாலாட்டுது

மனமே மனமே
உன்னை யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
யார் வந்தது?
கண்கள் தாலாட்டுது...

யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?


உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்



Photobucket




வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

No comments:

Post a Comment