"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Tuesday, January 25, 2011

தமிழ் மொழி வாழ்த்து



வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி


வாழிய வாழியவே !





வான மளந்த தனைத்தும் அளந்திடும்


வண்மொழி வாழியவே!




ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி


இசைகொண்டு வாழிய வே!


எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி


என்றென்றும் வாழியவே!


சூழ்கலி  நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்


துலங்குக வையகமே!


தொல்லை வினைதரு தொல்லை யகன்று


சுடர்க தமிழ்நாடே!




வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி


வாழ்க தமிழ்மொழியே!




வானம் அறிந்த தனைத்து மறிந்து


வளர்மொழி வாழியவே












This free script provided by
JavaScript Kit

Saturday, January 22, 2011

என்னவொரு உயர்வான கௌரவம்?


சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். 

வாழ்க்கை வரலாறு 

பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 

13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார். 

அரசியல் சேவை 

1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். 

சமூக சேவை 

இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. 

சமய சேவை 

அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார். 

தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். 

1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார். 

யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். 

அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
அரசியலில் இவர் பணிகள்
 
இத்தீவின் சுதந்திரத்தை பிரித்தானிய காலனிய ஆட்சியாளரிடம் ஒரே குரலில் வலியுறுத்திக்கோரும் பொருட்டாக முன்வைக்கப்பட்ட தீர்மான வரைபில்தானே ஆட்புல பிரதிநிதித்துவமும் வலியுறுத்தப்பட்டிருந்தமையால் யாழ்ப்பாண மகாசபையின் தலைவர்களான சபாபதியும் கனகசபையும் ஆட்சேபித்து அதில் கையெழுத்திட மறுத்திருந்தார்கள். ஒற்றையாட்சி நிலவும் நிலையில் ஆட்புலப் பிரதிநிதித்துவம் தமிழ் மக்களை எண்ணிக்கையில் சிறுபான்மையினராக மாற்றிவிடும் என்பதே அவர்களது ஆட்சேபனைக்குக் காரணமாக இருந்திருத்தல் வேண்டும்.
தீவிலுள்ள அனைத்து அமைப்புகளையும் இணைத்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவ முற்பட்டிருந்த சிங்களத் தலைவர்கள் பீரிஸும் சமரவிக்ரமவும் சபாபதியையும் கனகசபையையும் சம்பந்தப்பட்ட வரைபுத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற இணங்க வைப்பதற்கு உதவும் பொருட்டு பொன்.அருணாசலத்தின் உதவியை நாடியிருந்தார்கள்.

ஆட்புல பிரதிநிதித்துவம் வலியுறுத்தப்படுவதாக சம்பந்தப்பட்ட வரைபுத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறுவதற்கு பொன். அருணாச்சலம் உதவி புரிந்தால் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதற்கு நாம் தடையாக இருக்கப்போவதில்லையென்றும் கொழும்பு வாழ் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைக்கத் தாம் உதவுவதாகவும் பொன்.அருணாச்சலத்திற்கு வாக்குறுதியும் தந்திருந்தார்கள் அவர்கள் இருவரும்.

மேற்படி வாக்குறுதியை நம்பியவராக சேர்.பொன்.அருணாச்சலம் அளித்த பரிந்துரையின்படியே யாழ்ப்பாண மகாசபை அதனது ஆட்சேபனையைக் கைவிட்டு இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பை நிறுவும் வரைபுப் பிரேரணைத் தீர்மானமாக நிறைவேறுவதற்கு உதவியிருந்தது. சேர்.பொன்.அருணாச்சலம் இலங்கைத் தேசிய காங்கிரஸின் முதல் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கைத் தேசிய காங்கிரஸின் முதல் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதும் தமது மூத்த சகோதரர் சேர்.பொன்.இராமநாதனிடம் ஆசி பெறுவதற்கு சேர்.பொன்.அருணாச்சலம் சென்றபோது "தம்பி கவனம் நீதி கதிரையோடு தூக்கி வெளியே வீசப்படுவாய்' என்றே சேர்.பொன். இராமநாதன் தமது இளையவனை எச்சரித்திருந்தார். அவரது சொந்த அனுபவம் சேர்.பொன்.இராமநாதனை அங்ஙனம் பேச வைத்திருந்தது. குதிரைகளுக்குப் பதிலாக தம்மைத் தேரில் இருத்தித்தாமே இழுத்துச் சென்றிருந்த சிங்களத் தலைமை பின் எங்ஙனம் மாறியிருந்தது என்பதையும் தமது ஞாபகார்த்தமாகச் செய்யப்பட்ட உருவச் சிலையையே நிறுவ முன்வராது அரட்டை செய்யப் போகிறது என்பதையும் சேர்.பொன்.இராமநாதனின் முன்னுணர்வு அவரை விழிப்புறச் செய்திருந்தது.

சேர்.பொன்.இராமநாதன் வாக்குப் பொய்க்கவில்லை. வதிவிட தகுதியின் நிமித்தம் தலைநகர் கொழும்பில் வாழ்ந்து வந்த சேர்.பொன்.அருணாச்சலம் கொழும்பில் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். அதனைத் தடுக்கும் பொருட்டுத் தாமே தலைநகர் கொழும்பில் வேட்பாளராகத் தேர்தலில் நிற்கப்போவதாக பீரிஸ் அறிவித்திருந்தார்.

அதனை எதிர்கொள்ளும் பொருட்டு சிங்களத் தலைமையால் தமக்கு வாக்களிக்கப்பட்ட கொழும்புத் தமிழர்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்தை சேர்.பொன்.அருணாச்சலம் ஆளுநரிடம் வலியுறுத்தத் தலைப்பட்டார். ஆளுநர் அதற்கு இணங்கிவிடுவார் எனப் பயந்த சிங்களத் தலைமைக் காலனிகளின் செயலாளரிடம் அதற்கு எதிராகப் பிரதிநிதித்துவம் செய்திருந்தது. சிங்களத் தலைமையால் முன்வைக்கப்பட்ட வாதம்

தமிழர்கள் இத்தீவின் ஏனைய சிறுபான்மையினரைப் போன்ற ஒரு சமூகம் அல்ல.

அவர்களும் சிங்களவர்களைப் போன்று ஒரு பெரும்பான்மையினரே. ஆதலால் அவர்களுக்கு விசேட பிரதிநிதித்துவம் வேண்டியதில்லை என்பதே .

ஆகவே காயுமற்ற கறியுமற்ற நிலைக்கு என் சமூகம் தள்ளப்படுதலே தேசியம் எனில் எனக்கு அத்தேசியம் வேண்டாம் எனத் தெரிவித்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் உறுப்புரிமையைத் துறந்த சேர்.பொன்.அருணாச்சலம் தமிழர் தேசிய மகாசபையை நிறுவியிருந்தார். அவரால் முன்வைக்கப்பட்டதே தமிழீழக் கோரிக்கை. தமது இலட்சியக் கோரிக்கையை எய்து முன்பே அவர் காலமானமை தமிழரின் துர்ப்பாக்கியமே!

அவரது மூத்த சகோதரர் சேர்.பொன்.இராமநாதனோ,ஒற்றையாட்சி நிலவும் இத்தீவில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்படுதலை ஆட்சேபித்தார். காரணம் தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக சிறுபான்மையினராக மாற்றப்படுவர் என்பதனாலேயே. இதனால் சர்வஜன வாக்குரிமையை டொனமூர் விசாரணைக் குழுவினர் பரிந்துரைத்ததும் டொனமூர் எனில் இனித் தமிழர் இல்லை என்பதே அர்த்தமாம் என உணர்ந்து அத்துடன், அரசியல் பொதுவாழ்வில் இருந்தே ஒதுங்கிக் கொண்டார் சேர்.பொன். இராமநாதன்.

ஆயினும் சட்ட நிர்ணய சபையோ ஒரேயொரு வாக்கினை மட்டும் பெரும்பான்மையாகப் பெற்றே நிறைவேற்றியிருந்தது. அது சட்டமாக நிறைவேறுவதற்கு உதவியிருந்தவர் மட்டக்களப்புப் பிரதிநிதி தம்பிமுத்துதான். வெகுவிரைவில் ஊழல் குற்றச்சாட்டின்கீழ் தம்பிமுத்துவின் பிரதிநிதித்துவப் பதவியே பறிக்கப்பட்டது.

காயுமற்ற கறியுமற்ற சாம்பார் நிலைக்கு எனது இனம் தள்ளப்படுதலே தேசியமெனில் அத்தேசியத்தை யான் வேண்டேன் என உரைத்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பிலிருந்து வெளியேறியவராக

சேர்.பொன்.அருணாச்சலம் தமிழர் தேசியப் பேரவையை நிறுவியிருந்தபோதும் அவர் பெற்ற புதல்வர் எஸ்.சி.மகாதேவாவே தமது தந்தை சொல்வாக்கை மந்திரமாக எடுத்துக்கொள்ளாது தமது தந்தையாரால் புறக்கணித்து ஒதுக்கப்பட்டிருந்த அதே தேசியத்தில் இரண்டறக் கலந்து உள்நாட்டு அமைச்சராகவும் வந்திருந்தார்.

இத்தீவுக்கு சர்வஜன வாக்குரிமை பரிந்துரைக்கப்பட்டபோது அது ஒற்றையாட்சி நிலவும் தேசத்தில் எண்ணிக்கையில் குறைந்த தமிழ் மக்களைப் பெரிதும் பாதிப்பதாக அவர்களை சிறுபான்மையினராக மாற்றிவிடுமென்ற காரணத்தினால் சேர்.பொன்.இராமநாதன் டொனமூர் எனில் இனித் தமிழர் இல்லையென்பதே அர்த்தம் என்று சொல்லியே தமது அரசியல் பொதுவாழ்வினைத் துறந்திருந்தார். அதற்கு விரோதமாக அவரது மருமகன் சு.நடேசபிள்ளையோ அரசியல் பொதுவாழ்வில் தாம் நுழைந்து கொண்டதுடன், இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பிற்கு எதிராக டி.எஸ்.சேனநாயக்கா ஓர் அரசியல் கட்சியை நிறுவுவதற்கு அவருடன் ஒத்துழைப்பு நல்கியிருந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சி எனும் பெயரை அதற்கு முன்மொழிந்தவரும் நடேசபிள்ளையே. வரலாறு கற்றுத்தந்த பாடத்தால் படிப்பினை பெறுவதற்குத் தவறிய சு.நடேசபிள்ளை அதன் நிமித்தம் கண்ணீர் சிந்த நேர்ந்த வரலாற்றைப் பின்னர் காண்போம்.

டொனமூர் விசாரணைக் குழுவினரையடுத்து சோல்பரி ஆணைக்குழு இந்நாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தது. பிரித்தானிய காலனி ஆட்சியாளரினால் ஆட்புல பிரதிநிதித்துவத்தால் தமிழுக்குச் சம்பவிக்கவிருந்த கேட்டை சேர்.பொன்.அருணாச்சலமும் சர்வஜன வாக்குரிமை பரிந்துரைக்கப்பட்டதால் சம்பவிக்கவிருந்த அனர்த்தத்தை சேர்.பொன்.இராமநாதனும் சுட்டியிருந்தமையை பார்த்தோம். இவர்களது வழியில் ஜி.ஜி.பொன்னம்பலம் சோல்பரி ஆணைக்குழுவினர் முன்பாகத் தோன்றி சமபல பிரதிநிதித்துவத்துக்காக ஏறத்தாழ ஒன்பது மணிநேரம் தொடர்ச்சியாக வாதாடியிருந்தார். பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதாகவிருந்தால் இத்தீவின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவம் தரப்படுதல் வேண்டுமென்பதே சமபல பிரதிநிதித்துவக் கோரிக்கையின் அர்த்தமாகவிருந்தது.சிங்களவர் இதனை ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையென வர்ணித்திருந்தனர். எந்தவொரு சமூகமும் ஐம்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடாது என்பதே அவருடைய வாதமாக இருந்தது. இத்தீவின் சகல சிறுபான்மை மக்களும் கூட்டாக சிங்களப் பெரும்பான்மை மக்களுக்குச் சமனான சமபல பிரதிநிதித்துவம் பெற்றிருத்தல் வேண்டுமென்பதே சமபல பிரதிநிதித்துவக் கோரிக்கையின்சாரமாகவிருந்தது. சிங்களவர்களுக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவமெனில் தமிழருக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவம் தரப்படுதல் வேண்டும் என்பது அதன் அர்த்தமாக ஒரு போதுமே இருந்திருந்ததில்லை.

ஆயினும் நியாயமான இந்தச்சமபல பிரதிநிதித்துவக் கோரிக்கையை நிராகரித்து ஓர் ஒற்றையாட்சி அரசியலமைப்பை சோல்பரி ஆணைக்குழுவினர் பரிந்துரைத்திருந்தமையை பிரித்தானிய காலனிச் செயலாளர் முன்சென்று ஆட்சேபிக்கும் பொருட்டு சட்டசபை உறுப்பினர் ராஜகுலத்தையும் உடன் அழைத்துக் கொண்டு சீமைக்குப் புறப்பட்டார். ஜீ.ஜீ. பொன்னம்பலம் எது எவ்வாறிருப்பினும் சோல்பரி ஆணைக்குழுவினது அறிக்கை மீது இலங்கை சட்டசபை எடுக்கப் போகும் தீர்மானத்துக்குக் காத்திருக்கும் படி அங்கு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட விடயம் சட்ட சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு விடப்படும் போது தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரையும் கூட்டாக அதனை நிராகரிப்பதாக வாக்களிக்கும் படி அவர்களை வற்புறுத்திக்கேட்டுக் கொள்ளும் பொருட்டு ராஜகுலத்தை அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இலங்கைக்கே திருப்பி அனுப்பியிருந்தார்.

ஆயினும் இலங்கை வந்தடைந்த ராஜகுலம் ஒரு பொது வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சமயம் அவர் செவிகளில் கேட்கும் படியாக டி.எஸ்.சேனநாயக்க, சேர் மொலேமுரேயிடம் "அதோ வருகிறார் எங்கள் அடுத்த தொழில் அமைச்சர்' எனத் தெரிவித்துள்ளார். அக்கூற்றை உண்மையென வி
ங்கிக் கொண்ட ராஜகுலம் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தம்மிடம்சொல்லி அனுப்பியிருந்தத்ற்கு விரோதமாக ஏனைய தமிழ் உறுப்பினர்கள் அனைவருடனும் கூட்டாக இணைந்து சோல்பரி ஆணைக்குழுவினது அறிக்கை பரிந்துரைத்திருந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பினை ஏற்றுக் கொள்வதற்கு சாதகமாகவே வாக்களித்திருந்தார். டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையோ ஒரே ஒரு தமிழ் துரோகியாகிய தம்பிமுத்துவின் வாக்கினால் நிறைவேற்றப்பட்டிருந்தது. தெரிந்ததே. அதற்கான பிரேரணை தனியொரு வாக்கினை மட்டுமே பெரும்பான்மையாகப் பெற்றிருந்தது. ஆயின் சோல்பரி ஒற்றையாட்சி அரசியலமைப்போ அதற்கு முற்றிலும் மாறாக சட்டசபையில் இருந்த அனைத்துத் தமிழ் உறுப்பினர்களுடைய வாக்குகளை பெற்று அச்சமயம் சபையில் அவர்கள் பிரசன்னமாக இருந்திராமை காரணமாக ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் ஒரேயொரு வாக்கு மட்டுமே புறநீங்கலாகவிருக்க அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

தம்பிமுத்து தமிழுக்கு இழைத்த துரோகத்திற்கு விதி அவரைத் தண்டிருந்திருந்தது. விரைவிலேயே ஊழல் குற்றச்சாட்டு நிமித்தம் தமது சட்டநிர்ணயசபை உறுப்புரிமை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. எந்த சோல்பரி ஒற்றையாட்சி அரசியலமைப்பினை அங்கீகரிப்பதாக சட்டசபையில் தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக வாக்களித்திருந்தார்களோ அதே பரிந்துரையின் நடைமுறைப்படுத்தலால் எதிர்வருவதற்கு இருந்த முதல் பாராளுமன்றத் தேர்தலிலேயே சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அனைவரையும் தோற்கடிக்கும் பொருட்டாக 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அவர்களுக்கு எதிராக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. கல்குடாவில் போட்டியிருந்த வி.நல்லையா ஒருவர் புறநீங்கலாக சம்பந்தப்பட்ட எஸ்.சி.மகாதேவா, பு.நடேசபிள்ளை உள்ளடங்க அனைவரும் அத்தேர்தலில் படு தோல்வியடைந்தனர்.

கல்குடாவில் தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டிராமையே நல்லையாவின் வெற்றிக்குக் காரணமெனலாம். ஆயினும் 1952 தேர்தலையடுத்து தபால் அமைச்சராக வந்திருந்த வி.நல்லையாவும் ஒரு பெண் விடயத்தால் அவமானப்படுத்தப்பட்டே அவரும் தம்பிமுத்துவைப் போன்றே பதவி அவரிடம் இருந்தும் பறிக்கப்பட்டிருந்தது. அவரது மந்திரப் பதவி.

1947 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழு உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். சமபல பிரதிநிதித்துவமே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையும் அதன் அடிப்படைக் கொள்கையுமாகும். இருந்த போதிலும் அக்கட்சியின் அடிப்படைக் குறிக்கோளுக்கே விரோதமாக தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைச் சரிபாதியாகக் குறைக்கும் பொருட்டு 1948 டிசம்பர் திங்களில் பிரஜாவுரிமைச் சட்டத்தைப் பதவியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்தது. சமபல பிரதிநிதித்துவமே அதன் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்த அகில இலங்கைத் தமிழ்க் கட்சியின் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழுபேரும் சம்பந்தப்பட்ட பிரஜாவுரிமை மசோத பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சமயம் சனப்பிரதிநிதிகள் சபையில் சமூகமாகவிருந்து மசோவிதற்கு எதிராகச் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏழுபேரும் கடுமையாக வாதிட்டு அதற்கு எதிராக அத்தனை பேரும் கூட்டாக எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டாமா?

கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு விரோதமான தமிழ்பேசும் மக்களில் சரி பாதித்தொகையினரது பிரஜாவுரிமையைப் பறித்து வாக்குரிமையற்றவர்களாக அம்மக்களை மாற்றிய அம்மசோதா சனப்பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியோ வெறுமனே அம்மசோதாவிற்கு ஓர் அடையாள எதிர்ப்பினை மட்டுமே தெரிவித்திருந்தது. ஒதண்t ச் tச்டுஞுண ணிஞடீஞுஞிtடிணிண தீச்ண் ணூச்டிண்ஞுஞீ ஞதூtடஞு tச்ட்டிடூ ஞிச்ணஞ்ணூஞுண்ண் ணீச்ணூtதூ இதனைத்தான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சர்பில் அம்மசோதாவை எதிர்த்து ஜி.ஜி.பொன்னம்பலமும் தந்தை செல்வநாயகமும் வாக்களித்திருந்தார்கள் என்று 1974 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆவணத்தில் அ.அமிர்தலிங்கத்தினாலும் பின்னர் குறிப்பிட முடிந்தது.

அதாவது சனப்பிரதிநிதிகள் சபையில் ஏழு பிரதிநிதிகளை உடையதாகவிருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அதனது முழுப்பலத்துடன் சம்பந்தப்பட்ட மசோதாவை எதிர்த்து வாக்களித்திராது சம்பந்தப்பட்ட மசோதா சட்டமாவதற்கு உடன்பாடான ஓர் இணக்கமான ஒத்துழைப்பினையே நல்கியிருந்தது. ஆகவே, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலமும் தந்தை

செல்வநாயகமும் சம்பந்தப்பட்ட மசோதாவை எதிர்த்து வாதிட்டு எதிர்த்து வாக்களிக்கவும் செய்திருந்தபோதும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களான ஏனைய ஐவரும் அச்சமயம் சபையில் பிரசன்னமாகவிருப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்தனர் கட்சித் தலைமையின் கட்டளைப்படி. எனவேதான் அது விடயத்தில் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. சபையில் அன்று பிரசன்னமாகவிருந்த கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கு.வன்னியசிங்கத்தை அணுகிய கட்சியின் தலைவர் எங்கள் கட்சியில் இருவர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பதாக பிரதமருக்கு அளித்த வாக்குறுதிப்படி ஒன்றில் வன்னியசிங்கம் சபையில் இருந்து வெளியே வேண்டும் அல்லது தாமே வெளியேறப்போவதாகச் சொல்லியே வன்னியசிங்கத்தையே சபையில் இருந்து வெளியேற்றியிருந்தமை இதனை உறுதிப்படுத்துகின்றது. ஓர் இணக்கமான ஒத்துழைப்பின் ஆதாரத்திலேயே அதனையடுத்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அரசில் சேர்ந்து ஒரு முழு மந்திரிப் பதவியும் ஓர் அரை மந்திரிப் பதவியும் பெற்றுக்கொண்டிருந்ததும் வரலாறு.

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆசியுடன்தான் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை நல்கும் இலங்கைப் பிரஜாவுரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் கூற்றிலும் உண்மை இருப்பதாகச் சொல்ல முடியாது. காரணம் வைபவமுறைப்படி ஜவஹர்லால் நேருவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த இலங்கை இந்திய காங்கிரஸ் அவ்வாறிருப்பின் அச்சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தின் முன்பாக நீண்டதொரு சத்தியாக்கிரகத்தை நடத்தியிருக்குமா? இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் அதனைக் கண்டியாதிருந்திருப்பாரா?

முப்பது வருடங்கள் தந்தை செல்வா வழியில் அறவழிப் போராட்டங்களாலும் முப்பது வருடங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தினாலும் பெற முடியாத தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஓர் இணக்கமான ஒத்துழைப்பின் மூலம் பெறும் ஓர் எத்தனமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 2011 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களியாது தவிர்ப்பதற்காக வாக்களிப்பில் இருந்து விலகியிருந்துள்ளார்கள். வரலாற்றால் பாடம் படியாதவர்களுக்கு திரும்பவும் திரும்பவும் அதே படிப்பினைகளையே வரலாறு புகட்டுமெனும் உண்மையை இவர்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகின்றனரோ?
மூலம்: தினக்குரல் - தை 04, 2011
                  இதெல்லாம்  அனைவரும் அறிந்த விடயங்கள். நான் பதியவந்ததும் அவரது பழைய கதைகளையல்ல. இன்று யாழில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கண்ட ஒரு வேதனையான காட்சியையே. அந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே முன்பு சேர் பொன் இராமநாதன் அவர்களது சிலை நிறுவப்பட்டிருந்தது. பின்பு போர்ச்சூழலில் சிதிலமடைந்த சிலை கவனிப்பாரற்று கிடந்ததது. அருகில் நீதி மன்று கட்டப்பட்டபோதும் துரையப்பா விளையாட்டரங்கு புனரமைக்கப்பட்டபோதும் இச்சிலையை யாரும் கண்டுகொள்ளவில்லை. சில நூறு மீற்றர் தூரத்தில் தந்தை செல்வா நினைவுத்தூபி உள்ளது. புனரமைத்து இடையிடையே பராமரிப்பு என்ற பெயரில் புல் வெட்டி சீராக்கும்போதும்கூட ஏனோ யாரும் இச்சிலையை பார்ப்பதில்லை. ஒருவேளை சேர் பொன் இராமநாதன் அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் தொடங்காததால்தான் இந்நிலைபோலும். என்னசெய்வது? அவருக்கு அந்நேரம் அது புரியவில்லை.
                                   தற்போது   அவ்விடத்தில் கண்காட்சி நடைபெறும்போதும் சிலையை புனரமைக்க எவரும் முன்வரவில்லை. மாறாக உடைந்த சிலையின் கழுத்துப்பகுதி கம்பியில் மின் இணைப்பு கம்பிகள் சுற்றப்பட்டு கம்பமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஓர் அறிஞரின் சிலைக்கு இன்று கொடுக்கப்பட்டுள்ள மரியாதை இது. 
வரலாற்றை மறந்து ஒரு தமிழ் அறிஞரின் சிலையினை அவமதித்து, அதே சிலையில் மின்னிணைப்பு கம்பிகளை சுற்றி ஒரு கண்காட்சி தேவையா?  
ன்னவொரு உயர்வான கௌரவம்? 
எப்போமாறும் இந்நிலை?   






Wednesday, January 19, 2011

என்னவள்


அவள் அழகானவள் - பேச்சில் 
அவள் அறிவானவள் - செயலில்
அவள் ஆற்றலுள்ளவள் - நிர்வாகத்தில் 
அவள் நம்பிக்கையற்றவள் - மந்திரங்களில் 
அவள் நம்பிக்கையுள்ளவள் - இறைவனில்
அவள் விருப்புள்ளவள் - எதிர்காலத்தில்
அவள் வெறுப்புள்ளவள் - ஆடம்பரத்தில்
அவள் சேமிப்பவள் - வருவாயில்
அவள் இறுக்கமானவள் - செலவீனத்தில்
அவள் பணிவானவள் - குடும்பத்தில்
அவள் பண்பானவள் - பழக்கத்தில்
அவள் அன்பானவள் - அணைப்பில்
அவள் நேர்மையானவள் - நடத்தையில்
அவள் இனிமையானவள் - பார்வையில் 
அவள் தூய்மையானவள் - மனதில்
அவள் ஒழுங்கானவள் - கடமையில்
அவள் முதிர்ந்தவள் - பண்பில்
அவள் அன்னையானவள் - ஆறுதலில்
அவள் அனைதுமானவள் - உறவில்
அவள் விரைவானவள் - புரிதலில்
அவள் மெதுவானவள் - கண்டிப்பில்
அவள் உயர்ந்தவள் - ஒழுக்கத்தில்
அவள் தாழ்ந்தவள் - அடக்கத்தில்
அவள் இடம்பிடித்தவள் - இதயத்தில்
அவள் ஒதுங்கிவிடுபவள் - விமர்சனங்களில்
அவள் மென்மையானவள் - உள்ளத்தில்
அவள் கடினமானவள் - உறுதியில்
அவள் விருப்புபவள் - சத்தியத்தில்
அவள் வெறுப்பவள் - ஆடம்பரத்தில்
அவள் விட்டுக்கொடுப்பவள் - வாதத்தில்
அவள் தாங்குபவள் - பின்னடைவுகளில் 
அவள் பொறுமையுள்ளவள் - ஏமாற்றங்களில்
அவள் ஆசையில்லாதவள் - சொத்துகளில்
அவள் பாத்திரமானவள் - நம்பிக்கையில்
அவள் தூரநோக்குள்ளவள் - வாழ்வில்
அவள் இரசனையுள்ளவள் - இயற்கையில்
அவள் சக்தியுள்ளவள் - துன்பங்களில்
அவள் ஆழமானவள் - சிந்தனையில்
அவள் மென்மையானவள் - புன்னகையில்
அவள் அவதானமானவள் - பக்குவத்தில்
அவள் தளர்வானவள் - அதிகாரத்தில்
அவள் பிடிப்புள்ளவள் - சுதந்திரத்தில்
அவள் மதிப்புள்ளவள் - மாண்டவர்களில்
அவள் ஆராதிப்பவள் - உணர்வில்
அவள் ஒளிவீசுபவள் - அறிவில்
அவள் துனிவானவள் - ஆபத்தில் 
அவள் உறுதியுள்ளவள் - கொள்கைகளில் 
அவள் பூரணமானவள் - கற்பில்
அவள் பிரமிப்பானவள் - சேலையில்
அவள் பற்றுள்ளவள்  - தமிழில்
அவள் நேசிப்பவள் - பண்பாட்டில்
அவள் வாழ்பவள் - எளிமையில்
அவள் வாழாதவள் - தற்பெருமையில்
அவள் பிரகாசமானவள் - முகத்தில்
அவள் துவண்டுவிடாதவள் - தோல்விகளில்
அவள் இரக்கமானவள் - ஏழைகளில்
அவள் இனிமையானவள் - நினைவுகளில்
அவள் காத்திருப்பவள் - தடைகளில்
அவள் துடிப்பானவள் - பணிகளில்
அவள் நிறைவானவள் - மனதில்

இத்தனைக்கும் அவள்  முகம் தெரியாதவள்...
                             நிஜத்தில் நான் காணாதவள்...
                             கற்பனையில் வாழ்பவள்...
                             கற்பனைகள் கனவாகவே போகலாம், 
                             நிஜமாகவும் மாறலாம்...


எதுவும் என்கையில் இல்லாததால் இப்போதே எழுதிவிட்டேன் கற்பனையில் வாழும் என்னவளின் இயல்புகளை.





This free script provided by
JavaScript Kit

Thursday, January 13, 2011

"தமிழ் புத்தாண்டு" அறிவியல், வரலாற்று பார்வை


சித்திரை மாதத்தில் பிறப்பதாகச் சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா?

வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் காலக் கணக்கு முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.

இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ள-தைக் கவனிக்கலாம் இந்த அறுபது ஆண்டு-களுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத்தமிழ்ப் பெயர் இல்லை!
இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுரு-வலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்-பட்டுள்ளது எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா? என்று கேட்டார். அதற்குக் கண்ணன், நான் இல்லாத பெண்ணை வரிக்க என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடு-களிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாத-தால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன் என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.

மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார். தொல்காப்-பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்-கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் அறிவர்கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள் தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான் தமிழன்.
தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும். பொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெரும் திருநாள் ஆகும்.

பொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழியை புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும் -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழர்- ஜப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. ஜப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல் பத்தன்று நூறன்று பன்னூறன்று பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்

நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த
ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் !
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.
--பாவேந்தர்
இலக்கியங்களில் தமிழ் திங்கள்கள்

தேவாரம்
சிகரத்து இடை இளவெண்பிறை வைத்தான் இடம், தெரியில்
முகரத்துஇடை முத்தின்(ன்) ஒளி பவளத்திரள், ஓதம்,
தகரத்துஇடை தாழைத்திரள் ஞாழல்-திரள், நீழல்,
மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
ஆரிய முட்டாள்களின் இந்து ஆண்டு முறையை(சித்திரை) பின்பற்றுவோர் கூறும் காரணப்படி பார்த்தாலும் யாரும் ஒரு துவக்கத்தை உச்சியில் துவக்குவதில்லை. ஒரு நாள் பொழுது துவங்கும் பொழுது ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுது துவக்குவதில்லை. மாறாக ஒரு நாள் நள்ளிரவில் துவங்கி சிறிது சிறிதாக விடியத்துவங்கி அரை நாள் முடியும் பொழுது ஞாயிறு உச்சிக்கு வருகின்றது. மீதும் ஞாயிறு சிறிது சிறிதாக மறையத் துவங்கி நள்ளிரவில் அந்த நாள் முடிவடைகின்றது. அது போலவே ஆண்டும் ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுது துவங்குவதில்லை. உலகில் எந்த இனமும் கொடும் கோடை காலத்தில் தங்கள் ஆண்டினை துவங்குவதில்லை. இந்த முட்டாள் ஆரியன் அவன் இருந்த பகுதியில் பின்பற்றிய ஆண்டு முறையை இங்கும் வந்து புகுத்திட அதை பின்பற்ற தமிழன் என்ன முட்டாளா? இழிச்சாவாயனா?

உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம், தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். மழை, வெயில்,குளிர், பனி, தென்றல், வாடை இவை மாறி மாறிப் பருவக் காலங்கள் மனிதனை ஆண்டு வந்ததால் தமிழன் ஆண்டு என்று அழைத்தான். என திரு. வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார்.

பண்டையத் தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர்.
"வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்" என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.

1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்

இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நாட்களை இவ்வாறு கணக்கிட்டத் தமிழன்; காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.

1. இளவேனில் - தை,மாசி மாதங்கள்
2. முதுவேனில் - பங்குனி, சித்திரை மாதங்கள்
3. கார் - வைகாசி, ஆனி மாதங்கள்
4. கூதிர் -ஆடி,ஆவணி மாதங்கள்
5. முன்பனி - புரட்டாசி, ஐப்பசி மாதங்கள்
6. பின்பனி - கார்த்திகை,மார்கழி மாதங்கள்

பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர் கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியினரான உலகின் மூத்த தமிழ்க் குடியினர், அவர்களது மொழி மற்றும் வாழ்வியல் கூறுகளை பூமியின் சுழற்சியை சரியாக மதிப்பிட்டும், இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தும் தமது காலக் கணிப்பீட்டு முறைமைகளை உருவாக்கியவர்களாவர்.

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப் படுத்திக்கொண்டான்.

பொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்றே அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது - போகியது - போகி) பொங்கல் என்பது பொங்கு-தல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.

எனவே போகி என்பது போக்கிய நாளானது. (பழைய ஆண்டு) புது நாள் என்பது புத்தாண்டாகவும் கொள்ளப்பட்டது. எனவே தமிழரின் புத்தாண்டு பழந்தமிழரின் காலக் கணிப்பீட்டுக்கு அமைவான தை மாதம் முதலாம் நாளிலேயே கொண்டாடப்பட வேண்டும். 

தை மாதச் சிறப்பு

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம். "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் தமிழர் முதுமொழியை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்" என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தை மாத தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாக கால காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என ஆரவாரம் செய்தல், பொங்கலை பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்கு படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந் தொட்டு இருந்து வருகின்றது.

இவை அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக ஜப்பானியர்களாலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் பண்பாட்டு ஒருமைப்பாடு இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த தைப்பொங்கல் நாள் பண்டையக் காலம் தொட்டே சமயச் சார்பற்று அனைத்து தமிழரதும் திருநாளாக விளங்குகின்றது. அதேப் போன்றே தை மாதம் முதல் நாள் தொடங்கும் தமிழ் புத்தாண்டு நாள்; உலகில் தமிழ் பேசும் அனைவரதும் புத்தாண்டு பிறப்பு நாள் என்பது தமிழ் அறிவியலாளர்களின் ஆய்வின் முடிவாகியுள்ளது.

இனி தமிழ் மாதங்களின் இல்லை, இல்லை -
தமிழ்த் திங்கள்களின் பெயர்களைப் பார்ப்போமா?

தை முதல் மார்கழி ஈறாக உள்ள 12 திங்கள்களுக்கும் தனித் தமிழ்ப் பெயர்கள் உண்டு.
அவை எவை என அறிவீர்களோ? மிக மிக முற்காலத்திலேயே தமிழன் வகுத்துத் தந்த கால அட்டவணை (calendrier / calendar) வான வெளியில் ஞாயிறு வலம் வருதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வான மண்டலத்தைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து 'ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருக்கிறார்கள்.ஒவ்வொரு பகுதியிலும் கண்ணுக்குப் புலனாகும் விண்மீன்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்துப் பெறும் உருவங்களின் அடிப்படையில் பெயர்கள் இடப்பெற்றுள்ளன.

இப்படிப் பெயர் கொடுத்தவர்கள் கிரேக்க வானியலார் என்பர். அவர்கள் பயன்படுத்திய சொல் என்ன தெரியுமா? 'horos'. இன்று ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் பல சொற்களுக்கு, 'horoscope, horodateur, hour, heure, year...' இச்சொல்லே வேர்ச் சொல். இந்த 'horos' என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'boundary, limit, border' என்று பொருள். (காண்க : On line etymology dictionary & The American Heritage dictionary). இந்தச் சொல்லுக்கு மூல வேர்ச்சொல் தேடப் போனால் நம் தமிழுக்குத்தான் வர வேண்டும். பக்கம், விளிம்பு எனப் பொருள்படும் ஓரம் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் ஓரை. (காண்க : தமிழ்மொழி அகராதி - நா.கதிரைவேற்-பிள்ளை)

இந்த ஓரை என்ற சொல்லின் கிரேக்க வடிவம்தான் 'horos'. வானப் பகுதிகள் பன்னிரண்டிலும் ஞாயிறு தங்கிச் செல்லும் பக்கத்தைத் தமிழர்கள் ஓரை என்று அழைத்தார்கள். இதற்கு வடமொழியில் 'இராசி ' என்று பெயர். கிரேக்கத்துக்கு ஏற்றுமதி ஆனது ஓரை என்ற தமிழ்ச் சொல் மட்டும் அல்ல, அஃது உணர்த்தும் பொருளும் தமிழர்களின் வானியல் அறிவும்தான். ஆக, தமிழர்கள் கண்ட 12 ?டி"ரைகளைத்தான் கிரேக்கர்களும் கண்டனர். இவற்றின் பிரஞ்சு, ஆங்கில, கிரேக்க, தமிழ்ப் பெயர்களையும் அவற்றுக்கு உரிய (தற்காலத்தில் உலகம் நெடுக வழங்கும்) குறியீடுகளையும் எதிர் வரும் பட்டியலில் காண்க.

ஞாயிறு எந்த? ஓரையில் தங்குகிறதோ, அந்த ஓரையின் பெயரையே அந்தத் திங்களுக்கு (மாதத்தக்கு)ப் பெயராய் இட்டனர் தமிழர். கிரேக்கர்களும் உரோமர்களும் இம்முறையைப் பின் பற்றவில்லை. எனவே, தமிழர்களாகிய நாம் நம் திங்கள்களுக்கு (மாதத்துக்கு)ச் சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள தனித் தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்துதல் வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் பழகியபின் இவை எளிமையாகிவிடும்.

வார நாள்கள் ஏழினுக்கும் கோள்களின் பெயர்களை இட்டனர் தமிழர். இம்முறையைக் கிரேக்கர்கள் பின்பற்றவில்லை, உரோமர்களோ மிகப் பிற்காலத்தில் தான் இம்முறையைக் கடைப்பிடித்தனர்.
கிழமை என்ற சொல்லுக்கு 'உரிமை' என்று பொருள். எனவே, ஞாயிற்றுக்கு உரிய நாள் என்ற பொருளில் ஞாயிற்றுக் கிழமை என்-கிறோம். புதன், சனி என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. ஆகவே, அவற்றுக்கு ஈடான அறிவன், காரி என்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்-படுத்துதல் நன்று.ஆக, தமிழர்களின் புத்தாண்டு அதாவது வள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்களில் தொடங்கவில்லை மாறாகச் சுறவம் முதல்நாள் (சனவரி 14) தொடங்குகிறது என்பதை நினைவில் கொண்டு நம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை.
12 ஓரைகள் ( இராசிகள்)

Période Français English Greek
mars 21 - avril 20 Bélier Ram Aries
avril 21 - mai 21 Taureau Bull Taurus
mai 22 - juin 21 Gémeaux Twins Gemini
juin 22 - juillet2 Cancer Crab Cancer
juillet 23 - août 22 Lion Lion Leo
août 23 - septembre 23 Vierge Virgin Virgo
septembre 24-octobre 23 Balance Balance Libra
octobre 24- novembre 22 Scorpion Scorpion Scorpio
novembre 23-décembre 21 Sagitaire Archer Sagitarius
décembre 21-janvier 20 Capricorne Goat Capricorn
janvier 21-février 19 Verseau Waterbearer Aquarius
février 19 - mars 20 Poissons Fish Pisces

வழக்குத் தமிழ் - தனித்தமிழ்

தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - இரட்டை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
ஐப்பசி - துலை
புரட்டாசி - கன்னி
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை
கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

        ஞாயிறு - ஞாயிறு
        திங்கள் -  திங்கள்
        செவ்வாய் - செவ்வாய்
        புதன் - அறிவன்
        வியாழன் - வியாழன்
        வெள்ளி - வெள்ளி
        சனி - காரி
(தகவல்கள் - நண்பர் கார்த்திகேயன் தெயவீகராஜன்) 

அன்பான உள்ளங்களிற்கு மலரும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...


2042 ஆவது திருவள்ளுவர் ஆண்டை இனிதாய், மகிழ்வாய் வரவேற்போம்.... 




This free script provided by
JavaScript Kit

Wednesday, January 12, 2011

நவீனத்துக்குள் தொலையும் வாழ்வு

ஆலோசனை கூறும் அளவிற்கு நான் பெரியவனில்லைத்தான், ஆனால் இதனை நான் இரவு தூங்கியபோது கனவில் கண்டு விடிந்தபின் எழுதவில்லை.  இவ்விடயங்களை பல நூறுபேரின் முகநூல் (facebook) பக்கங்களையும் பதிவேற்றங்களையும் பலநாட்களாக பார்த்து அவதானித்து  பதிந்தவற்றைக்கொண்டே எழுதுகிறேன். சிறிய கவனயீனமான செயல்களால் எதிர்காலமே பாழாகிறது. இதை ஆலோசனையாக எண்ணாமல் எனது கருத்தாக பாருங்கள். விரும்பினால் பின்பற்றுங்கள், உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். இந்தப்பதிவினை பார்க்கும் உங்களில் சிலருக்காவது இதில் ஏதாவது பயன்பட்டால் அது போதும். அதுதான் நான் எதிர்பார்க்கும் விளைவுமாகும்.
*மகளிர் முகநூல் முகப்பு படத்தில் உங்கள் படத்தை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் தற்போது பலரும் தலைமாற்றி படங்களை வெளியிடுவதை பொழுதுபோக்காக செய்கிறார்கள். பற்றாக்குறைக்கு இச்சேவையை இலவசமாக வழங்கும் இணைய தளங்களும் உள்ளன.

*உங்கள் படங்களை உறவுகளுடன் முகநூலூடாக பரிமாற்றிக்கொள்ளும்போது அவர்கள் மட்டும் பார்க்கக்கூடியதாக Settingஐ மாற்றுங்கள். அதற்கான வசதிகள் முகநூலில் உள்ளன. 

*உங்கள் படங்களை தவறாக பயன்படுத்தநினைப்பவர்கள், நீங்கள் அறியாமலேயே உங்கள் பெயரிலேயே ஒரு பக்கத்தை ஆரம்பித்து அதில் உங்கள் பக்கத்திலுள்ள அனைத்து தகவல்கள், படங்கள் போன்றவற்றை எடுத்து பதிந்து பதிவேற்றி உங்கள் நண்பர்களை இணைத்து உங்களைப்போலவே தகவல்களை பரிமாறி உங்கள் தகவல்களையும் அறிவதோடு உங்கள் உறவுகளின் தனிப்பட்ட தகவல்களையும் அறிந்துகொள்கிறார்கள். உங்களை தெரிந்தவர்களது, உறவுகளது பெயரில் இணைப்புக்காக வேண்டுகைகள் வரும்போது உரியவர்களிடம் பேசி அவர்களது வேண்டுகைதானா என்பதை உறுதிப்படுத்தியபின் இணைத்துக்கொள்ளுங்கள். 

*உங்கள் கணனிகள், மடிக்கனிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தும்போது இரவல் கொடுக்கும்போதும் திருத்தங்களிற்காக கொடுத்து மீள பெறும்போதும் கவனமாக இருக்க வேண்டும். Team viewer போன்ற  Soft ware உங்கள் PCஇல் install செய்யப்பட்டிருக்கலாம். அதனூடாக  வேறு எவரும் உங்க கணணியை கண்காணிக்க, உங்கள் செயற்பாடுகளை பார்க்கமுடியும். அதை Control Panelஇல் Add or Remove Programsஇல் போய் உறுதிப்படுத்தி  இப்படி எதாவது புதிய Soft ware உங்கள் PCஇல் install செய்யப்பட்டிருந்தால் அவற்றை  Removeபண்ணி விடுங்கள். இப்படி Net Cafe களிலும் நீங்கள் உங்களையறியாமலேயே கண்காணிக்கப்படலாம்.
 

*எவராக இருப்பினும் செல்லிடபேசி, டிஜிட்டல் புகைப்பட கருவிகளில் உங்களை நீங்களோ அல்லது மற்றவர்களோ 'அரைகுறையாக' படம் எடுக்காதீர்கள்/ எடுக்க அனுமதிக்காதீர்கள். அவை வெளியே வேகமாக பரவுவதுடன் இணையத்திலும் வலம் வரலாம். எடுத்து அழித்தபின்னும் Memory cardஇலிருந்து அவற்றை மீள எடுக்கக்கூடிய Softwareகள் பல உள்ளன.

*தற்போது ஆடைகள் கொள்வனவின்போது பலரும் விற்பனை நிலையத்திலுள்ள அறையிலேயே அவற்றை அணிந்து அளவு பார்க்கிறார்கள். அப்படியான அறைகளில் செல்லிடப்பேசி, CCTV, Bluetooth camera போன்றவற்றை மறைத்து வைத்து வீடியோக்களையும் படங்களையும் எடுக்கக்கூடும். சிறிய அளவில் தயாரிக்கப்படும் அவை இருப்பது வெளியே தெரியாமல் இருக்கலாம். அப்படி எடுக்கப்பட்ட பல காட்சிகள் இணையத்தில் பரவியுள்ளன.

*அப்படியான இடங்களிலுள்ள முகம்பார்க்கும் கண்ணாடிகளிலும் அவதானம் தேவை. இப்போ ஒருபக்கம் முகம்பார்க்கும் கண்ணாடிபோலவும் மறுபக்கம் வெப்பத்தடுப்பு கண்ணாடி (Cooling glass) போலவும் செயற்படும் கண்ணாடிகளும் பொருத்தப்படுகின்றன.
 

*பொது இடங்களில், புதிய இடங்களில் உள்ள குளியலறை, கழிப்பறைகளை பயன்படுத்துப்போது மிகவும் அவதானம் வேண்டும். பல படங்கள் அங்குதான் எடுக்கப்படுகின்றன. தற்போது சுற்றுலாக்கள் அதிகரித்துள்ள நிலையில் புதிதாக தங்கும் விடுதிகளில் இவை இடம்பெறலாம். அதேபோல் அலுவலகங்கள், பாடசாலைகளிலும் நடக்கக்கூடும்.
 

*உங்கள் திருமணத்தின் முன் உங்கள் துணைவருடன் (அவர் நிச்சயிக்கப்பட்டவராகவே இருப்பினும்) தனியிடங்களுக்கு செல்வதை தவிர்த்திடுங்கள். அப்படி திட்டமிட்டு உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு தெரியாமலேயே படமாக்கப்படலாம். அண்மையில் இவ்வாறு செல்லிடப்பேசியை சூயிங்கத்தால் சுவரில் ஒட்டி வைத்து எடுத்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகி தற்கொலைவரை போனதை பலர் அறிந்திருப்பீர்கள்.

*வீட்டைவிட்டு எங்கு வெளியே செல்வதாயினும் நேரத்தை சரியாக திட்டமிடுங்கள். வெளியிடங்களில் தாமதிக்காதவாறு நடந்துகொள்ளுங்கள். வீணான பிரச்சினைகள் பல இதனால் தடுக்கப்படும். இது கல்விநிலையங்களில் கற்பவர்களுக்கும் பொருந்தும்.
 

*இன்று பலரும் பலருடனும் உரையாட Web cameraவை பயன்படுத்துவது அதிகம். அதிலும் முகம் தெரியா நட்புகளுடன்கூட Skypeல் மணிக்கணக்கில்  உரையாடுகிறார்கள். இதன்போது உங்கள் உணர்ச்சிவசமான செயற்பாடுகள்  அந்த  பரால் பதியப்படலாம். பின் உங்கள் அசைவுகளிற்கேற்ப  Editing செய்து புத்திய வசனங்கள் இணைத்து படமாகவே ஓட வைத்துவிடுவார்கள். அப்படியும் சில காட்சிகள் உள்ளன.
இளமையிலேயே ஏன் கருகவேண்டும்?
கனவுகள் ஏன் சிதையவேண்டும்?
"அரிது, அரிது, மானிடராய் பிறத்தல் அரிது,
கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிதிலும் அரிது" என்பது சான்றோர் வாக்கு. அப்படியான வாழ்வை பெற்ற நாம் ஒழுக்கம் தவறி நடப்பதும் இழிவானதே. ஒழுக்கம் என்பது உயிரிலும் மேலானது. தவறி வாழ்வது பிணத்திற்கு நிகரானது. கணப்பொழுது இன்பங்களிற்காக வாழ்வையே இழந்து நிற்போர் பலர் உள்ளார்கள். மனதில் உறுத்தல் இருக்கும், ஆனால் வெளியே கூறமாட்டார்கள். அப்படியான ஒரு நரக வாழ்விலிருந்து தப்பி வாழ எமது அவதானமும் பொறுப்புர்வுமே கை கொடுக்கும். இளம் வயதிலேயே எதிகாலத்தை கேள்விக்குறியாகிவிட்டு எவரோ முகம்தெரியா மனிதர்களிற்கு பயந்து, மிரட்டல்களிற்கு பணிந்து, அவர்களது Black mailகளிற்கு கட்டுப்பட்டு வாழ்வதிலிருந்து விலகிநடப்போம். வளமான எதிர்காலத்தை  உருவாக்குவோம். 










This free script provided by
JavaScript Kit

விடிந்தபோது எரிந்த தீயில் முடிந்து போனவன்...



உறவு தேடும் நினைவினோடு கடலில் வந்தவன்
உயர்ந்த தலைவன் முகத்தைக்கான விரைந்து வந்தவன்-விஜய்
அந்தப்படகில் கிட்டுவோடு வந்தவன்
விடிந்தபோது எரிந்த தீயில் முடிந்து போனவன்...

உலகதிசைகள் முழுதும் திரிந்து சிறகுவிரித்த பறவைகள்
உயர உயர பறந்தபொழுதும் உறவை நினைத்த குருவிகள்
ஊர் திரும்பி வந்தன -கொடும் 
தீயில் எரிந்து வெந்தன
தாயகத்தை காணுகின்ற ஆசையோடு நின்றன
தாவுமலை மீதிலேறி வேகமோடு வந்தன
பேய் அரக்கர் வலையில் விழுந்து பேச்சிழந்து போயின
பேசவொரு வார்த்தையின்றி காவியமாய் ஆயின

உலகதிசைகள் முழுதும் திரிந்து சிறகுவிரித்த பறவைகள்
உயர உயர பறந்தபொழுதும் உறவை நினைத்த குருவிகள்
நட்டநடு கடலினிலே தீயை அன்று மூட்டினார்
நம்பும் தமிழ் ஈழமென்று  சொல்லி துள்ளி பாடினார்
கிட்டு அண்ணனோடு விஜய் சேர்ந்து நின்று கூவினான்
இந்திய அரசு தலைகள் குனிய உயிரை தூக்கி வீசினான்

உலகதிசைகள் முழுதும் திரிந்து சிறகுவிரித்த பறவைகள்
உயர உயர பறந்தபொழுதும் உறவை நினைத்த குருவிகள்
தாயகத்து விழிகளிலே நீர் கசிந்து வழிந்தது
தலைவனது விழிகளிலோ தீ எழுந்து மூண்டது
வாய்கள் எல்லாம் சோகமுடன் பெயரைச்சொல்லி பாடின
வல்லரசின் கோரமுகம் ஊர், உலகம் அறிந்தன

உலகதிசைகள் முழுதும் திரிந்து சிறகுவிரித்த பறவைகள்
உயர உயர பறந்தபொழுதும் உறவை நினைத்த குருவிகள்

***************************************************************************
13ஆம் நாள் தொடக்கம் 19ஆம் நாள் வரையான ஒவ்வொரு கணங்களும்.....
உங்கள் சாவு உறுதியாகியும் நீங்கள் சுவாசித்த கணங்கள்,
உங்கள் உறவுகளை இறுதியாக நினைத்த கணங்கள்,
உங்கள் பிறந்த மண்ணை மனதில் எண்ணிய கணங்கள்,
வழிகாட்டியவர்களை மீட்டுப்பார்த்த கணங்கள்,
ஆம்...
விடுதலை சுமந்தவர்களை வித்துடல்களாகவும் நாம் சுமக்கவில்லையே.............?
கடலம்மா, எங்களுக்கு நீதிசொல்ல எவருமில்லையா...........?






This free script provided by
JavaScript Kit

Friday, January 7, 2011

பரமபிதாவும் காப்பாற்ற முடியாதவர்கள்


இன்று யாழில் எமது இளம்தலைமுறை தடம்மாறி பரம மண்டல பரமபிதாவும் காப்பாற்றமுடியாத திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. கலாச்சாரம் காணாமல் போகிறது. பண்பாடு பாழ்படுகிறது. நாகரிக மாற்றம் என்ற பெயரில் அநாகரீகத்தின் உச்சத்தை நோக்கி நகர்கிறது. முன்னைய காலத்தில் பெரியவர்களால் பொத்தி கட்டிக்காக்கப்பட்ட யாழ்ப்பாணக்கலாச்சாரம் இன்று சீரழிந்து போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இளைஞர், யுவதிகளிடையே காணப்படும் 
*கட்டுப்பாடற்ற சுதந்திரம், 
 *கட்டுபாடு இருந்தும் ஏமாற்றுகின்ற திறமை, 
  *அளவுக்கு மீறிய வசதிவாய்ப்புகள், 
   *கண்காணிப்பு இன்மை, 
    *பிள்ளைகள் மீதான பெற்றோரின் அதீத நம்பிக்கை போன்ற காரணங்கள் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன.
                                                               அதனால் காதல் என்றால் என்ன என்பதே புரியாதநிலையில்  எதிர்ப்பால் ஈர்ப்பினை காதலென அர்த்தம்கொண்டு சலீம்-அனார்கலி, ரோமியோ-ஜூலியட் கற்பனைகளில் சிறகைவிரித்து  தம்மை மறந்து சூழ்நிலைகளையும் மறந்து சீரழிந்து போகிறார்கள். கெடுவது அவர்கள் மட்டுமல்ல, காதலும்தான். இளைய தலைமுறையை நாளைய சிற்பிகள்  என்பார்கள். ஆனால் அவர்கள் இப்போதே செதுக்குகிறார்கள் எதையோ எல்லாம் SMSகளில். Onlineஇல் பாதி வாழ்க்கையையே வாழ்கிறார்கள். தமிழில் அழகாய் ஒன்று சொல்வார்கள், "பிஞ்சிலே பழுத்தது" என்று. அதுகூட இவர்களிற்கு பொருந்தாது. இவர்களெல்லாம் "பிஞ்சிலே வெம்பியவர்கள்".  
                                            தமிழ் பண்பாட்டிற்கே உரிய சிறப்பான அம்சம் "கற்பு". ஆனால் இன்று இது பலருக்கும் என்னவென்று தெரிவதில்லை. பல ஆண்களின் பார்வையில் இதன் அர்த்தமே வேறு. இது ஏதோ பெண்களிற்கு மட்டுமே பொருந்தும் ஒன்று, எமக்கல்ல என்ற போக்கு. இதன் விளைவே நிலைகெட்ட பயணம். பெண்களிலும் சிலர் தெரியவாபோகிறது என்ற துணிவில் நடக்கும்போது நல்லவொரு கூட்டணி அமைந்து வாழ்வே நாசமாய் போகிறது. கல்வி நிலையங்களிற்கு என்று கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு பேரூந்து நிலையத்து சீமெந்து இருக்கைகளில்  மணிக்கணக்கில் காத்திருந்து துணைகள் சேர்ந்து அவர்கள் கற்கும் பாடம் பெற்றோருக்கு தெரிவதில்லை. பலர் கல்வி நிலையங்களில் பிள்ளைகள் படித்த பாடங்களை ஒப்புக்கேனும் பார்ப்பதுமில்லை. அது அவர்களிற்கு பெற்றார் கொடுக்கும் சீரழிவுச்சலுகை. வீட்டிலிருந்து பார்க்கும் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் புரியுமளவிற்கு பிள்ளைகளின் நாடகங்கள் புரிவதில்லை. பல பெற்றார் நினைக்கலாம் எங்கள் பிள்ளைகள் ஒழுக்கமானவர்கள், அவர்கள் தவறமாட்டார்கள் என்று. உங்கள் பிள்ளைகள் நல்லவர்கள்தான். ஆனால் சூழல் நல்லதில்லை. பலவித நட்புகள் அவர்களிற்கு கிடைக்கின்றன. அவை உங்கள் பிள்ளைகளை எப்படியும் இயக்கும் என்பதை ஏனோ மறக்கிறீர்கள். வாழ்வில் பயணிக்க பலவழிகள் உள்ளன, ஆனால் சரியான வழிகள் சிலதான். ஏனைய வழிகளின் முடிவுகள் குழிகளும் பள்ளத்தாக்குகளுமே. இளம் வயதில் அவை தெரிவதில்லை. தெரியும்போது காலம் கடந்துவிடுகிறது. எல்லாமே முடிந்தும்விடுகிறது. 
                                   எமது தவறுகளிற்கு மற்றவர்களிலிருந்து காரணத்தை தேடுவதை விடுத்து எம்மிலேயே தேடினால் தீர்வுகள் இலகுவாய் கிடைக்கும். எமக்குத்தான் அந்த இயல்பே இல்லையே? இன்று வீட்டிற்கு வீடு வலைப்பின்னல் (இன்டர்நெட்) வசதிகளுடன் கணனிகள் உள்ளன. வெளிநாட்டு உறவுகளுடன் கதைப்பதற்கு, பிள்ளைகளின் கல்வி தேடல்களிற்கு, அறிவு வளர்ச்சிக்கு என விளக்கங்கள் வேறு கிடைக்கின்றன. ஆனாலும் பல பெற்றார் கணனியின் அருகிலேயே போவதில்லை. எமக்கு எதுவும் தெரியாது, பிள்ளைகள்தான் "எல்லாம் படித்தவர்கள், அவர்களே கையாளட்டும்" என்ற மனநிலையில், கணணிகளையும் அவர்களது அறையினுள்ளேயே கொடுத்தும் விடுகிறார்கள். ஆனால் அப்படியான ங்கள் நிலைப்பாடே அவர்கள் "பிஞ்சிலே வெம்புவதற்கும்" வாய்ப்பாக அமைந்துவிடுகிறது என்பதை அறிவதில்லை. இன்று பெரியவர்களே கணினியில் பல விடயங்களை தேடும்போது, Filter வசதி உள்ள கணினிகளிலேயே 18+ விடயங்கள் தடக்குவதை கண்டிருப்பீர்கள். இவை இளையோருக்கும் தட்டுப்படும்போது கல்வி காற்றிலே பறக்க "ஆய்வுகள்" ஆரம்பிக்கின்றன. கல்வி கசக்கும்போது ஆய்வுகள் இனிக்கின்றன. தொடர தூண்டுகின்றன.  பாலியல் சீர்கேடும் போதை பாவனையும் பல்கலைக்கழக மாணவர்களிடையேயும் வேரூன்றியுள்ளது வேதனையானதே.  இப்போதெல்லாம் கல்விநிலைய  வெளிப்புறத்தில் உந்துருளிகளை (Motor Bike)  வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுடன் கல்விநிலையம் முடிந்ததும் மாணவிகளை அவர்களின் உந்துருளிகளில் ஏற்றிச் செல்கிறார்கள். இதை நாமே எத்தனை முறை நேரடியாக பார்த்துள்ளோம்.
   அடுத்த வாய்ப்பு GPRS வசதியுள்ள செல்லிடப்பேசிகளை கொடுப்பது. செல்லிடப்பேசியே தேவையில்லாத வயதிலும் ஏனோ அவற்றை கொடுத்து பெருமை கொள்கிறார்கள். அவசியம் தேவை என்றாலும் நவீன GPRS வசதியுள்ள செல்லிடப்பேசிகளை கொடுப்பது தேவையற்றது என்பதையும் உணர்வதில்லை. சிம்மையும் அடிக்கடி மாற்றுகிறார்கள், அதேபோல் துணைகளையும் அடிக்கடி மாற்றுகிறார்கள். Miss Call அடிப்பதிலேயே வாழ்வையும் Miss பண்ணிவிடுகிறார்கள்.  பலரது திருவிளையாடல்கள் வெளியே வரவும் அந்த நவீன வசதிகளுள்ள செல்லிடப்பேசிகளே காரணமாகவும் அமைந்துவிடுகின்றன. விளைவுகள் நீதிமன்று, தற்கொலை, இளவயது கர்ப்பம், கருச்சிதைவு என பல வகைகளில் கிடைக்கின்றன. அப்போதும்கூட பெற்றோருக்கு தம்தவறு புரியாமல்போவதுதான் ஆச்சரியம்.
                        வெளிநாட்டு உறவுகள் பனிக்குளிர் பாராமல் தேடுகின்ற பணம் இங்கு இப்படியான தேவைகளிற்கும் பயன்படுகிறது. பணத்தின் பெறுமதியும் அதன் மீதான மதிப்பும் சுயமாக உழைப்பவர்களிற்குத்தான் தெரியும்  என்பதை நிரூபிக்கிறார்கள். வெளி ஆடம்பரத்திற்காக வீணாக்குகிறார்கள். அழகு என்றெண்ணி  அலங்கோலமாய் திரிகிறார்கள். 
                             பெண்கள் கூந்தலை விரித்து வெட்டி சுருட்டிவிட ஆண்கள் வளர்த்து கற்றையாக கட்டிவிட என்று (அ)நாகரீகம் கொடிகட்டி பறக்கிறது. முடி வெட்டினாலும் கோழிக்கு கொண்டை வைத்ததுபோல் ஒரு வெட்டு. அதற்கு நிறம் நிறமாய் சாயம் வேறு. ஆடைகளின் அலங்காரம் சொல்லவே தேவையில்லை. எதற்காக அணிகிறார்கள் என்பதும் புரியவில்லை. சிறுவயது ஆடைகளை கவனமாக வைத்து பயன்படுத்துகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. அவற்றில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகங்களின் அர்த்தம் அவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ புரிபவர்களை நெளியவைக்கிறது. சிறுவயதில் பாவாடை,சட்டை. பருவமடைந்தபின் தாவணி,சேலை என்பதெல்லாம்  கதைகளில் வருகிறது, நிஜத்தில் இல்லை. இப்போ அணியப்படும் உடைகளின் பெயர்கள் இலகுவில் சொல்ல முடிவதுமில்லை. ஆண்கள் சிலருக்கு சட்டை பொத்தானின்  பயன் தெரிவதில்லை. அதனால் அவற்றை பூட்டி நேரத்தை வீணாக்குவதில்லை. வீசும் தென்றல் மார்பில் தவழ விட்டுவிடுகிறார்கள். அதற்கு நாகரீகம் என்று அர்த்தமும் சொல்கிறார்கள். மதுபானங்களிலும் நீந்துகிறார்கள். புகையில் மிதக்கிறார்கள். போதையில் இவர்களின் செயற்பாடுகள் பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கின்றன.

                                 முன்பு எனது "சுமப்பவளே, என்னை சிதைக்காதே" என்ற பதிவில் எழுதிய வரிகள் "அவனுக்கு அது ஒரு சம்பவம், அன்றுடன் சரி.
உனக்கு அது ஆயுள் முழுவதும் வலி, என்னை அழித்தால்கூட நினைக்கும்போதெல்லாம் உறுத்தும்". இதனை பெண்கள் புரிந்துகொள்ளும்போது தவறுகள் தடுக்கப்படும். அதற்காக நான் ஆண்கள் எதுவும் செய்யலாம் என்று கூறவரவில்லை, உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதைத்தான் கூறுகிறேன். முள் சேலைமீது பட்டாலும், சேலை முள்மீது பட்டாலும் சேதம் முள்ளுக்கு அல்ல, சேலைக்குத்தான்.
                               இன்று சுற்றுலா மையம் என்று அடையாளப்படுத்தப்பட்ட சில இடங்களே சீர்கேடுகளுக்கும் மையமாக இருப்பது பலரும் அறிந்தததே. அங்கு வேண்டத்தகாத ஆபாசமான செயல்கள் அரங்கேறுவதாகவும் குடும்பத்துடன் கடற்கரைக்குச்சென்று  காற்று வாங்க காலார நடந்து செல்ல முடியவில்லை என பலரும் கூறுகின்றனர். ஆனால் தங்கள் பிள்ளைகளும் தமக்கு தெரியாமல் அங்கு செல்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை. சிலவிடுதிகளில் மணித்தியால அளவுகளில் அறைகள் வாடகைக்கு விடப்படுவதாகவும் நாளேடுகளில் எழுதப்படுகிறது. பாடசாலை மாணவிகளிடம் கருத்தடை மாத்திரைகள் பரிமாறபடுவதாகவும் கூறப்படுகிறது. 
               இனிவரும் காலங்களில் பெற்றார் பிளைகளிற்கு மனம் முடிக்கும்போது (அதுவரை பிள்ளைகள் பொறுமையாக இருந்தால்) கிரகநிலைகளின் கூற்றை பார்க்கிறார்களோ இல்லையோ, அண்மையில் எடுத்த மணமக்களின் மருத்துவ அறிக்கைகளை பார்க்கும் காலம் தொலாவ்வில் இல்லை.
                    கண்கெட்டபின் சூரியனை வணங்க நினைப்பதில் பயனில்லை, வெள்ளம் மேவியபின் தடுப்பணை போடவும் முடியாது. தவறுகள் தெரிகின்றபோதும் யார் இவற்றை தடுப்பது? யார் கண்காணிப்பது? என்பதுதான் தெரியவுமில்லை, புரியவுமில்லை. பேணிவளர்த்த எம் பண்பாட்டை  மறந்தது சீர்கெட்டு போவதை பார்க்க வேதனையில் மனம் விம்முகிறது. இளமையின் உணர்வுகளை புதைத்துவிட்டு வாழ்ந்தவர்கள் இருந்த மண்ணில் இன்று சீர்கெட்டு நடப்பவரை பார்க்க இதயத்தில் ஒரு வலி தெரிகிறது. என்ன செய்வது? எம்மால் முடிந்ததது அதுதானே?   
  







This free script provided by
JavaScript Kit