"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Wednesday, February 16, 2011

மீள் மாற்றம் (Remix)-1


புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...


வரிவடிவம் 
 
பாடல் : ஏலேலங்கிளியே
திரைப் படம் : நான் பேச நினைப்பதெல்லாம்
பாடியவர் :  மனோ
இசை: சிற்பி

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக்கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே 
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

சோலைக்குயில் தேடி என்னை பார்க்க வந்துவிடும் 
ஒரு பாடல் கேட்டுவரும்
ஆடி வெள்ளம் தேடி வந்து ராகம் சொல்லித்தரும்
எந்தன் தாகம் தீர்த்துவிடும்
நானா பாடுற பாட்டு அந்த தென்றலும் அதை கேட்டு
நானா பாடுற பாட்டு அந்த தென்றலும் அதை கேட்டு
வசந்தம் இன்று பூவில் வரும், நாளை எந்தன் வாசல் வரும்
வசந்தம் இன்று பூவில் வரும், நாளை எந்தன் வாசல் வரும்

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப்பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

சோகம் எல்லாம் போகும் ஒரு தேதி சொல்லட்டுமா?
நல்ல சேதி சொல்லட்டுமா?
அன்பில் இந்த மண்ணை வெல்லும் வித்தை சொல்லட்டுமா?
வெற்றி முத்தை அள்ளட்டுமா?
ஒத்தையடிப் பாதை இதில் தேரும் வரும் நாளை
ஒத்தையடிப் பாதை இதில் தேரும் வரும் நாளை
எல்லாம் நாளை மாறி விடும், நிலவும் கூட பூமி வரும்
எல்லாம் நாளை மாறி விடும், நிலவும் கூட பூமி வரும்

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக்கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே 
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே 

ஏலேலங்கிளியே
 என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

ஒலி, ஒளி வடிவம்
 


புதிய வரிகள்.

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை 

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை

நீ சுற்றித்திரிவது,  அத பார்க்க கொதிக்குது 
உன் நிலையை எண்ணி மனது வெம்புது 
எந்தன் உள்ளம் விம்மி வெடிக்குது

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை

செய்ய பல வேலையிருந்தும் சோம்பி இருப்பதா?
நீ தெருவில் சுற்றுவதா?
உன் அன்னை மண்ணை விட்டு நீயும் வெளியில் ஓடுவதா?
மண் பாழ்பட்டு போவதா?
எப்படி இது நியாயம்? என் உள்ளம் எல்லாம் காயம்,
எப்படி இது நியாயம்? என் உள்ளம் எல்லாம் காயம்,
நீங்க இப்படி ஓடினா, நாடு எப்படி முன்னேறும்டா?
நீங்க இப்படி ஓடினா, நாடு எப்படி முன்னேறும்டா?

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை 

உந்தன் நாடு, பண்பாடெல்லாம் மறந்து போவதா?
அதை ஒதுக்கிவிடுவதா?
அந்நிய நாட்டில் அகதி என்று  பெயரும் கேட்பதா?
அடிமை வாழ்வும் வாழ்வதா?
எம்நாடு இருக்கு வாழ, வளங்கள் இருக்கு நிறைய,
எம்நாடு இருக்கு வாழ, வளங்கள் இருக்கு நிறைய,
ஏன் ஓடுறாய் மண்ணை விட்டு? பெற்றோரையும் தனிக்கவிட்டு?
ஏன் ஓடுறாய் மண்ணை விட்டு? பெற்றோரையும் தனிக்கவிட்டு?

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை 

நீ சுற்றித்திரிவது,  அத பார்க்க கொதிக்குது 
உன் நிலையை எண்ணி மனது வெம்புது 
எந்தன் உள்ளம் விம்மி வெடிக்குது

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை 





This free script provided by
JavaScript Kit

No comments:

Post a Comment