"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Sunday, February 20, 2011

அன்னைக்காக பாதங்களில் சமர்ப்பணம்...



அம்மா தாயே!
காலையிலேயே மனது கனத்தது,
உடலிருக்க உங்களுயிர் போனதறிந்து,
மாசற்ற திருமகனின் தாயார் நீங்கள்,-அதனால்
அளவற்ற துன்பங்களை சுமந்தவரும் நீங்கள்,
வாழ்ந்த வீடுகூட இன்று கற்குவியலம்மா,
தகரப்பந்தலில் தீருவிலில் வைத்து வணங்கும் நிலையம்மா, 


பிள்ளைப்பாசம் உங்களை சுகங்களை உதறவைத்தது,
தள்ளாத வயதிலும் வட்டுவாகலில் உங்களை நடக்கவைத்தது,
அதிக வேதனைகள் உங்கள் நினைவுகளை தப்பவைத்தது,
நோயின் கரங்களில் உங்களை தள்ளிவிட்டது,
மாற்று இனத்தவரும் பாதம்தொட்டு வணங்கியவர் நீங்கள்,
பெற்ற பிள்ளைகளிடம்கூட போகமுடியாதிருந்தவர் நீங்கள்,


முள்ளிவாய்க்காலில் நீங்களிருந்தது
உங்கள் மகனின் நீதிநெறித்தீர்ப்பு,
நீங்கள் வந்த பாதைகளெல்லாம் வரலாற்றின் பதிப்பு,
அன்பான கணவர் விண்ணுலகம் சென்று
இன்னும் ஆகவேயில்லை ஆண்டு ஒன்று,
அவர் வழி நீங்களும் விரைந்ததிலிருந்து
தெரிகிறது உங்களின் இல்லற அன்பு,


பிள்ளைகளிலிருந்தும் இன்று சிதைமூட்ட அருகிலில்லையம்மா,
ஆனாலும் பிறந்த மண்ணின்காற்று உங்கள் சிதையை தழுவுமம்மா,
அது போதுமம்மா...
உங்களான்மா ஈடேற...
விழிகள் கசிய தலைகள் தாழ்த்தி தருகிறோமம்மா இறுதிவிடை...
வரலாற்றில் நாமெல்லாம் மறைந்திடுவோம், ஆனால் 
நீங்கள் வாழ்வீர்கள் வையகம் உள்ளவரை...



 
புதிய வரிகள் அன்னைக்காக பாதங்களில் சமர்ப்பணம்...


அலை தவழும் கடற்கரையில்
துவண்டு விழும் கொடியினைப்போல்
அன்னையவள் தூங்குகின்றாள் 
பார்த்தீரோ?

அவள் மனம் நிறைய துன்பம் உடன் 
ன் வாழ்வை முடித்துவிட்டு 
விழி மூடி தூங்குகின்றாள் 
பார்த்தீரோ?
விழி மூடி தூங்குகின்றாள் 
பார்த்தீரோ?

(அலை தவழும்…)

அன்புகொண்ட தமிழர்களின் 
நெஞ்சமெல்லாம் துயர் சுமக்க 
விண்ணுலகம் சென்றுவிட்டாள், 
பார்த்தீரோ?
பெற்றவரும் அருகில் இல்லை...
கணவரவரும் மேலுலகில்...
சிதை மூட்ட பிள்ளையில்லை,
பார்த்தீரோ?
சிதை மூட்ட பிள்ளையில்லை,
பார்த்தீரோ?



(அலை தவழும்…)

மருத்துவத்தை பெறுவதற்காய் 
சென்னை வரை வந்தவளை
திருப்பிவிட்ட முதல்வரைத்தான் 
கண்டீரோ?
அவர் மனதிலொரு இரக்கமில்லை,
வரவேற்கும் பண்புமில்லை,
யாரவரை தலைவராக ஏற்றீரோ?
தமிழினத்தின் தலைவரென்றும் சொல்வீரோ?
  
(அலை தவழும்…)

அன்னையவள் தூங்கிவிட்டாள்,
விண்ணுலகம் சென்றுவிட்டாள், 
சோதரரே பூத்தூவ வாரீரோ?

அவள் பூவுடலில் தீயை இட்டு 
பூவுலகில் விடைகொடுக்க 
அன்னையரே, தந்தையரே வாரீரோ?
அன்னையரே, தந்தையரே வாரீரோ?

(அலை தவழும்…)


மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம் 
ஆயர்பாடி மாளிகையில்
தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான்
தாலேலோ

அவன் வாய்நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
(ஆயர்பாடி…)

பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல்
லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
(ஆயர்பாடி…)

நாகப்படம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான்
தாலேலோ
அவன் மோக நிலை கூட
ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி…)

கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும்
போதை முத்தம் பெறுவதற்க்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி…)

ஒலி, ஒளி வடிவம் 





This free script provided by
JavaScript Kit

No comments:

Post a Comment