"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Thursday, June 16, 2011

மீள் மாற்றம் (Remix Song) -5



புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
புதிய வரிகள்.



இந்த மனசுக்குள் எப்ப வந்து நீ புகுந்த
என் புத்தியைத்தான் தடுமாற ஏன் வச்ச
அடி வானவில்லின் வர்ணம் அழகுதான்
அதை தொட்டுவிட துடிப்பது தவறுதான்

அடி வானவில்லின் வர்ணம் அழகுதான்
அதை தொட்டுவிட துடிப்பது தவறுதான்
அந்த வானவில்லும் மறைந்து போகுதடி
நிரந்ததரமில்லை அது புரியுதடி

இதயம் வலிக்குதே, இதயம் வலிக்குதே
ஏதோ நினைவுகள் அழுத்தையிலே
ஓஓஒ நானும் தவிக்கிறேன்
விடையை தேடுறேன்
வலிதான் கூடுதென் உள்ளத்திலே

எட்டாத நிலவென்று தெரிந்திருந்தும்
தீண்டிட மனசு துடிக்குதடி
நினைவல்ல கனவென்று புரிந்திருந்தும்
நம்பிட மனசு மறுக்குதடி

நிஜமும் நிழலும் தூரம் தூரம்
கிட்ட நெருங்க முடியல
உள்ளே நடக்கும் உணர்வு போரிலே
எந்த முடிவும் கிடைக்கல

இரவா.. பகலா...
உள்ளம் விடைதேடி அலையுதடி
எந்தன் மனமே
என்ன பார்த்து நகைக்குதடி

அந்த மாய திரையது விலகுமா?
அடி நினைவினை மனசு வெல்லுமா?
என் வாழ்வின் புதிர்களை தீர்த்திடுமா?

இரவென்றும் பகலென்றும்
இரண்டு ஒரே நாளில் வருகுதே
இன்பங்களும் துன்பங்களும்
இங்க மாறி மாறி நடக்குதே

இதயம் வலிக்குதே, இதயம் வலிக்குதே
ஏதோ நினைவுகள் அழுத்தையிலே
ஓஓஒ நானும் தவிக்கிறேன்
விடையை தேடுறேன்
வலிதான் கூடுதென் உள்ளத்திலே

எட்டாத நிலவென்று தெரிந்திருந்தும்
தீண்டிட மனசு துடிக்குதடி
நினைவல்ல கனவென்று புரிந்திருந்தும்
நம்பிட மனசு மறுக்குதடி

இந்த வாழ்கையில் இது ஒன்றும் புதுசில்ல
மனம் கட்டுப்பட மறுக்குது தவிப்பில
விதி வந்தும் விளையாடும் வாழ்கையில
விதிய வென்றிட மதியுமில்ல

எட்ட இருந்தும் உள்ளம் மட்டும்
கிட்ட இருக்குது நெஞ்சில
பட்டும் படாத நட்பு இருந்தும்
இந்த உறவோ புரியல

விதியா? மதியா?
ஒரு வேறுபாடு தெரியலையே
விதியா இருந்தும்
நெஞ்சு மறந்திட நினைக்கலையே

என் ஐயமும் ஒரு நாள் தீரலாம்
என் நினைவுகள் விட்டு போகுமா?
நான் மறுபடி பிறந்திட்டேன் எனக்குள்ள...

இரவென்றும் பகலென்றும்
இரண்டு ஒரே நாளில் வருகுதே
இன்பங்களும் துன்பங்களும்
இங்க மாறி மாறி நடக்குதே

இதயம் வலிக்குதே, இதயம் வலிக்குதே
ஏதோ நினைவுகள் அழுத்தையிலே
ஓஓஒ நானும் தவிக்கிறேன்
விடையை தேடுறேன்
வலிதான் கூடுதென் உள்ளத்திலே

எட்டாத நிலவென்று தெரிந்திருந்தும்
தீண்டிட மனசு துடிக்குதடி
நினைவல்ல கனவென்று புரிந்திருந்தும்
நம்பிட மனசு மறுக்குதடி

 
இரவென்றும் பகலென்றும்
இரண்டு ஒரே நாளில் வருகுதே
இன்பங்களும் துன்பங்களும்
இங்க மாறி மாறி நடக்குதே

இதயம் வலிக்குதே, இதயம் வலிக்குதே
ஏதோ நினைவுகள் அழுத்தையிலே
ஓஓஒ நானும் தவிக்கிறேன்
விடையை தேடுறேன்
வலிதான் கூடுதென் உள்ளத்திலே

எட்டாத நிலவென்று தெரிந்திருந்தும்
தீண்டிட மனசு துடிக்குதடி
நினைவல்ல கனவென்று புரிந்திருந்தும்
நம்பிட மனசு மறுக்குதடி

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ விதச்ச
அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்

அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசிரே போகுது உசிரே போகுது
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓஓஒ... மாமன் தவிக்கிறேன்
மடிப்பிச்சை கேட்க்கிறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கரை சீமையில நீ இருந்தும்
விரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழம் என்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல

தவியா.. தவிச்சு...
உசிர் தடங்கெட்டு திரியுதடி
தைலங்குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மன்மத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
எம் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

சந்திரரும் சூரியரும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
தல சுத்தி கிடக்குதே

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி பழி போட்ட மனசுக்குள்ள
விதி விலக்கில்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்தம் பந்தமோ போகல

பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும்
நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் ஒன்னுக்குள்
ஒன்னெடுத்து மனசுக்குள்ளே

சந்திரரும் சூரியரும் சுத்தி
ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப
தல சுத்தி கிடக்குதே
உசிரே போகுது உசிரே போகுது
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்க்கிறேன்
மனச தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில நீ இருந்தும்
அய்விரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினி பழம் என்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உசிரே போகுது உசிரே போகுது
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்க்கிறேன்
மனச தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில நீ இருந்தும்
அய்விரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினி பழம் என்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்







வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

No comments:

Post a Comment