"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Friday, December 24, 2010

மீண்டும் வேண்டும் எமக்கின்று அதே வரம்


அரணில்லை அகழியில்லை கோட்டையில்லை கோபுரமில்லை
.. .. .. ..தரணியாளும் அரசனிற்கும்  அரசனாக ஓரு பிள்ளை
பரணில்லை பகட்டில்லை பந்தாக்கள் தானுமில்லை
.. .. .. ..கறவைமாட்டுக் கொட்டிலுக்குள் முன்னணைதான் மறைவாகும்

படையில்லை குடையில்லை ஆணையில்லை ஆளுமில்லை
.. .. .. ..பிறந்துவிட்டார் நள்ளிரவில் சிறந்துவிட்டார் இயேசுராஜா
உடுப்பில்லை எடுப்பில்லை அலங்கார வளைவில்லை
.. .. .. ..கந்தையில் பொதிந்துகொண்டு ஏழையாய் இயேசுபாலன்

பெத்தலகேமில் வீடில்லை பட்டணத்தின் பெருந்தொல்லை
.. .. .. ..பந்தமில்லை சொந்தமில்லை யோசேப்பின் ஊரெல்லை
பத்துமாதயெல்லை சுமந்துவரும் மரியன்னை பெருந்தொல்லை
.. .. .. ..சொந்தமண்ணில் அந்நியராக ஊர்விட்டு ஊர்போனதால்

பெருமையில்லை பெருஞ்செலவில்லை பொருளில்லை பாராட்டில்லை
.. .. .. ..மனிதனுக்காய் மனிதனாய் மனிதகுமாரன் பிறந்தார்
உறவெல்லை செல்வரில்லை சீமானில்லை உச்சமில்லை
.. .. .. ..ஏழையின் தோழனாய் எளிமையின் கோலனானார்

தொலைக்காட்சியில்லை தொலைபேசியில்லை அலைவரிசையில்லை வானொலியில்லை
.. .. .. ..ஆனாலுமந்த மந்தைதேடி பறந்தோடி நற்செய்தி
மலையிருட்டில் தலைஉச்சியில் உரசியதீக்குச்சிச்சீறலாய்
.. .. .. ..இறங்கியதோ தெய்வீக ஒளியோடு தேவதூதன்

எதிர்பாரா நிசியிருட்டில் புதிரான ஒளியிறக்கம்
.. .. .. ..மந்தைமேய்ப்பர் சிந்தைகனக்க வந்ததூதர் கண்டுகொண்டார்
அதிர்ந்தமேய்ப்பர் ஆறுதலடைய நற்செய்தி பயப்படாதீரென்றார்
.. .. .. ..உலகரட்சகர் பெத்தலகேம் மாட்டுத்தொழுவில் பிறந்தாரென்றார்!          
(நன்றி- மணி ஓசை.)

வான தூதரின் கூற்று அன்று

.. .. .. ..காத்தது கன்னி மரியாளை  அவப்பெயரில் நின்று...
இனியநாளில் எமது வேண்டுதல் ஒன்று மீட்பரிடம்-
.. .. .. ..இந்த அவனியிலே வேண்டும் எமக்கோர் தேசம்,
.. .. .. ..அந்த தேசத்திலே வீசும் காற்றில் எங்கும் வீசவேண்டும் தமிழ் மம்,
.. .. .. ..தமிரெம்மை உலகமே வியந்து பார்க்கும் நிலை விரைவில் வேண்டும்,
.. .. .. ..இஸ்ரேலிலே உமது மக்களுக்கு நீர் கொடுத்தீரன்று இதே வரம்,
.. .. .. ..மீண்டும் வேண்டும் எமக்கின்று அதே வரம்.




No comments:

Post a Comment