"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Saturday, July 16, 2011

மீள் மாற்றம் (Remix Song) -8


புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
 

புதிய வரிகள்.

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது
முகமே தெரியாமல்
அந்த உறவு வளர்ந்தது
கண்டதும் இல்லை, கதை கேட்டதும் இல்லை,
 வாழ்வில் இது விதியா?
நினைவிலே வாழும் உள்ளமே இது முடிவா?
 இல்லை தொடரா?

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது
முகமே தெரியாமல்
அந்த உறவு வளர்ந்தது
(இசை) சரணம் - 1
நான் போகும் பாதைகளோ
காட்டின் ஓடை
நான் வாழும் வாழ்க்கையுமோ
சிலுவை பாதை

காலம் என்பதா? கோலம் என்பதா?
யார் செய்த பாவம்?
காலம் என்பதா? கோலம் என்பதா?
யார் செய்த பாவம்?

ஏற்றுகொள்ள  தடுக்குதடி
நான் வாழும் வாழ்வு
சேர்த்துவைக்க மறுத்து நிற்கும்
ஊர் கொண்ட வழக்கம்
நான் கொண்ட அன்பாலே
என் உள்ளம் வேகுதே

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது
முகமே தெரியாமல்
அந்த உறவு வளர்ந்தது
கண்டதும் இல்லை, கதை கேட்டதும் இல்லை,
 வாழ்வில் இது விதியா?
நினைவில் வாழும் உள்ளமே இது முடிவா?
இல்லை தொடரா?

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது

(இசை) சரணம் -2
பிறப்பிலே எழுதி வச்ச
எழுத்துகள் அங்கே
அதன்படி ஓடுகிற
வாழ்க்கைதான் இங்கே

படிப்பில் பட்டமும் வாழ்வில் தேட்டமும்
தேடும் இங்கு உலகம்
படிப்பில் பட்டமும் வாழ்வில் தேட்டமும்
தேடும் இங்கு உலகம்

கண்டங்கள் தாண்டி நின்று
ஆசை வந்ததேனோ?
உணர்வுகள் பேசிக்கொள்ள
உள்ளங்கள் கண்டதென்ன?
கடல் தாண்டி நின்றாலும்
நினைவுகள்தான் கூடுதே,

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது
முகமே தெரியாமல்
அந்த உறவு வளர்ந்தது
கண்டதும் இல்லை, கதை கேட்டதும் இல்லை,
 வாழ்வில் இது விதியா?
நினைவில் வாழும் உள்ளமே இது முடிவா?
இல்லை தொடரா?

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை, அன்னையும் இல்லை,
கனவா? வெறும் நினைவா?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா?
சிறுகதையா?

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
(இசை) சரணம் - 1
நாம் போடும் மேடைகளோ
நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ
காகித ஓடம்

பாசம் என்பதா? வேஷம் என்பதா?
காலம் செய்த கோலம்
பாசம் என்பதா? வேஷம் என்பதா?
காலம் செய்த கோலம்

கூடி வாழ கூடுதடி
ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாட காடு தேடும்
யார் செய்த பாவம்?
தாய் என்னும் பூமாலை
தரை மேலே வாடுதே

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை, அன்னையும் இல்லை,
கனவா? வெறும் நினைவா?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா?
சிறுகதையா?

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
(இசை) சரணம் - 2
காலங்கள் மாறி வரும்
காட்சிகள் இங்கே?
நியாயங்கள் ஆறுதலை
கூறுவதெங்கே?

மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னி பாவை
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னி பாவை

பாசதீபம் கையில் ஏந்தி
வாழ வந்த வேளை
கண்களாலே பெண்மை பாட
இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும்
நலமோடு வாழ்கவே

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை, அன்னையும் இல்லை,
கனவா? வெறும் நினைவா?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா?
சிறுகதையா?

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது

உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்
 






வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

No comments:

Post a Comment